காரியாபட்டி, அக்.26- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ.32.11 கோடி மதிப்பீட்டில், உபமின் நிலையம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: முடுக்கன்குளம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள முஷ்டகுறிச்சி, சத்திரபுளியங்குளம், எஸ்.மறைக்குளம், சூரனூர், கம்பாளி, இரு வர்குளம் போன்ற பகுதிகளுக்கு வெகு தொலைவில் இருக்கும் காரியாபட்டி, புல் வாய்க்கரை மற்றும் நரிக்குடி துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கு வதால் அப்பகுதியில் தாழ்வழுத்த குறை பாடு நிலவி வந்தது. மேலும், புல்வாய்க்கரை துணைமின் நிலையத்திற்கு 21 கி.மீ தூரத்தில் உள்ள ஆவியூர் துணைமின் நிலையத்திலிருந்தும், நரிக்குடி துணைமின் நிலையத்திற்கு 26 கி.மீ தொலைவில் உள்ள முத்துராமலிங்க புரம் துணைமின் நிலையத்திலிருந்தும் 33 கேவி மின்சாரம் பெறப்பட்டு கிராமங்க ளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், காற்று மற்றும் மழை போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது மின்சா ரம் தடைபடும் பட்சத்தில், பழுதை கண்ட றிந்து அதனை சரிசெய்வதற்கு மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. மேற்படி பகுதி களுக்கு மாற்று பாதையில் மின்சாரம் வழங்கவும் இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரி க்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், முடுக்கன்குளத்தில் ரூ.32 கோடியே 11 லட்சத்து 73 ஆயிரம் மதிப் பீட்டில் துணைமின்நிலையம் அமைப்ப தற்காக நிர்வாக அனுமதி பெற்று சனியன்று பணிகள் துவங்கப்பட்டுள்ளன என தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி தலைமை பொறியாளர் ப.செல்வராஜ், மேற் பார்வை பொறியாளர் ப.லதா, காரியாபட்டி ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாரி, திருச்சுழி ஒன்றியக் குழுத் தலைவர் பொன் னுத்தம்பி, முடுக்கன்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, வாலை முத்துச் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.