districts

img

மாணவர்களுக்கு குதிரையேற்றப் பயிற்சி

சிவகங்கை, செப்.8- மாணவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சியை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.  காரைக்குடி அருகே விசாலயங்கோட்டையில் உள்ள கலாம்கவி கிரா மத்தில் சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கலாம் கவி பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத் தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான குதிரையேற்றப் பயிற்சிப் பள்ளி தொடக்க விழா நடை பெற்றது  கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சேர்மன் சேது குமணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் விஷ்ணு பிரியா வர வேற்றார். அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி வைத்து, குதிரை ஏற்ற பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசும்போது, கல்லூரியில் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் 25 நபர்களுக்கு தலா 5 பசுக்களை வழங்கி அவர்க ளை பால் உற்பத்தியாளர்க ளாக்கி அவர்களுக்காக கூட்டுறவுச் சங்கம் தொட ங்கி அவர்களைப் பொருளா தாரத்தில் தற்சார்புடைய வர்களாக மாற்றி இப்பகு தியின் வளர்ச்சிக்கு உறு துணையாய் இருந்து சேவை யாற்றி வரும் வேளாண் ஆராச்சி மையத்தை பாராட் டுகிறேன். ஆராய்ச்சி மைய த்தின் சேவை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கி றது.  குதிரையேற்றப் பயிற்சி மாணவர்களுக்கு தன்னம் பிக்கையை வளர்ப்பதோடு அவர்களது இலக்கை அடைய உறுதுணையாக இருக்கும் என்றார். நிகழ் வில் தேசிய மாணவர் படை ஒன்பதாவது பிரிவின் காமா ண்டிங் ஆபீசர் ரஜனீஷ் பிரதாப், கல்லல் யூனியன் சேர்மன் சொர்ணம் அசோ கன், தி.மு.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், டாக்டர் திருப்பதி, கல்லல் கிழக்கு ஒன்றியத் தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழி யான் ஆகியோர் கலந்து கொண்டனர்.