சென்னை,பிப்.4- அமலாக்கத்துறை எங்கள் கதவை தட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில ளித்துள்ளார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்ப த்தில் நடைபெற்ற என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை, அமலாக்கத்துறை வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வீட்டின் கதவை விரைவில் தட்டும் எனக் கூறியிருந் தார். இதுகுறித்து அமைச்சர் துரை முருகனிடம் கேட்டபோது, அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம், அந்த கஷ்டம் அவர்க ளுக்கு எதற்கு நாங்களே திறந்து வைத்திருக்கிறோம் என்றார். மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்தி களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை கிளப்பி விடு வார்கள். கூட்டணி குறித்து முறை யான அறிவிப்பு வரும் என்றார்.