districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரையில் மீண்டும் வெற்றிவாகை

மதுரை, ஜூன் 4-  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 செவ்வாயன்று நடைபெற்றது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன்  இரண்டா வது முறையாக வெற்றி வாகை சூடினார். மதுரை மக்களின் அன்பான ஆதரவுடன் 4 லட்சத்து 30 ஆயிரத்து 323 வாக்குகள் பெற்று அபாரமாக வென்றார்.

பாஜக வேட்பாளர் இராம சீனிவாச னை விட 2,09,409 வாக்குகள் அதிகம்பெற்றார். 

மக்களவைத்  தேர்தல் வாக்கு எண்ணிக்கை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாயன்று நடை பெற்றது, தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை என 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு களும் தனித்தனியாக எண்ணப்பட்டது. மொத்தம் 25 சுற்றுகளாக  வாக்குகள்  எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை யின் தொடக்கம் முதலே திமுக தலை மையிலான  இந்தியா கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முதல் 9 சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இரண்டாம் இடம் பிடித்து வந்தார். அதன் பின்னர் 10வது சுற்றில் இருந்து அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பாஜக வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.  இறுதிச் சுற்றின் நிலவரப்படி 9,88,216 வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்படி திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2,09,409 வாக்கு கள் வித்தியாசத்தில் மொத்தம் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  பாஜக வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசன் 2,20,914 

பாஜக, அதிமுக ஆகிய கட்சி களை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் சத்யா தேவி உட்பட 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மதுரை மக்களவைத் தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார்.

இந் நிகழ்வில் தமிழக வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திமுக மாவட்டச் செயலாளர்- வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பி னர் தனசேகரன், துணை மேயர் தி. நாகராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத் தாய். எஸ்.பாலா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.