எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
பேராவூரணி, அக்.15 - பேராவூரணி குமரப்பா பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலை வர் டாக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். குழந்தைகள் எழுத்தறி வித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்தை எழுதி அறிமுகப்படுத்தினர்.
சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி: நாம் தமிழர் கட்சியின் சீமானை கண்டித்து பொன்னம ராவதி ஒன்றியம் கருகம்பூலாம்பட்டியில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி ஒன்றியம் கருகபூலாம்பட்டி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச ஒன்றிய தலைவர் ரெ.பிர தாப்சிங் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏனாதி ஏ.எல்.ராசு, சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்வம், இளைஞர் பெருமன்றத்தின் வி.பி. நாகலிங்கம், மாதர் சங்க பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பூதலூர் வடக்கு ஒன்றியம் கிளைச் செயலாளர் தேர்வு
தஞ்சாவூர், அக்.15 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட் டுப்பள்ளி பேரூராட்சி கிளை மாநாடு கூடநாணலில் நடை பெற்றது. கலைச்செல்வி தலைமை வகித்தார். மாநா ட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ. ஜீவக்குமார் துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி கிளைச் செய லாளராக பெண் தோழர் பி. ஆயிராசு தேர்வு செய்யப்பட் டார். மாரனேரி பூதலூர் வடக்கு ஒன்றி யம் மாரனேரி கட்சி கிளை மாநாடு எஸ்.மார்ட்டின் தலைமையில் நடைபெற் றது. புதிய கிளை செயலாள ராக ஆர். பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.