தேனி, ஜூலை 24- நீதிமன்றம் தொடங்கி 28 ஆண்டுகளாக சொந்த கட்டி டம் இல்லாத நிலையில் நீதி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தி ஆண்டி பட்டியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டியில் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல் பட்டு வருகிறது. ஆண்டிபட்டி நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கு பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான நிதி யும் ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஆனால் பல்வேறு கார ணங்களால் நீதிமன்றக் கட்டி டம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கவே இல்லை. இதன் காரணமாக தற்போது வரை வாடகை கட்டிடத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வரு கிறது. தனியார் கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல் லாத நிலையில் நீதிமன்றத் திற்கு வரும் மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் 28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் ஆண்டிபட்டி நீதிமன்றத் திற்குச் சொந்தக் கட்டிடம் கட்ட வலியுறுத்தி ஆண்டி பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்கத் தலை வர் கருப்பையா தலைமை வகித்தார். செயலாளர் முரு கன் முன்னிலை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.