திருநெல்வேலி, பிப்.19- சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, 2009-ஆம் ஆண்டு முதல் பிப் ரவரி 19ஆம் தேதி நீதித்துறை யின் கருப்பு தினமாக அனு சரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களி லும் வழக்கறிஞர்கள் புத னன்று நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக திர ளான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தமிழக அரசு, வழக்கறிஞர்கள் சேமநல நிதி முத்திரைத் தாள் கட்ட ணத்தை திரும்ப பெற வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜேஸ் வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், கு. பழனி, ரமேஷ் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.