districts

img

கிராமப்புற வளர்ச்சிக்கான நபார்டு வங்கிக்கடன் திட்டம் வெளியீடு

நாகர்கோவில். பிப். 19- கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2025-26 நிதியாண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தயா ரித்துள்ளது. இத்திட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர், ஜெ.பால சுப்பிரமணியன் நடைபெற்ற மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார். இத்திட்டம் மாவட்டத்தின் நிதி தேவை களை முன்னறிவித்து அதன் மூலம் நிலைத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் கிராமப்புற முன்னேற்றத்தை வலுப்படுத்து வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வங்கிகள், கொள்கையமைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஒரு  முன்னோக்கிய நிதி வழிகாட்டுதலாக செயல்படும். விவசாயம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்கட்டமைப்பு மற்றும் இணைந்த செயல்பாடுகளுக்கான கடன் அளவீடுகளை விரிவாகக் குறிப்பி டுகிறது. மொத்தமாக ரூ. 28687.10கோடி கடன் அளவீடு செய்யப்பட்டுள்ளது, இதில் விவசாயத்திற்கே அதிகபட்சமாக ரூ. 13,280.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மாவட்டத்தின் ஆண்டு கடன் திட்டம் உருவாக்குவதற்கான அடிப்படை யாக இருக்கும். இக்கூட்டத்தில் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், இந்திய ரிசரவ் வங்கி மேலாளர் ராதா கிருஷ்ணன், துணை பொது மேலாளர் வர பிரசாத், மாவட்ட முன்னணி மேலாளர் செல்வராஜ் வங்கியிலும், அரசு துறைக ளிலும் இருந்து பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.