districts

தேவாரம் அருகே பாம்பு கடித்து கூலித் தொழிலாளி பலி

தேனி ,ஜூன்.1-

     தேவாரம் அருகே பாம்பு கடித்து விவசாய கூலித்  தொழிலாளி பலியானார்.  

     தேனி மாவட்டம், தேவாரம் அருகே மல்லிங்க புரத்தை சேர்ந்தவர் சுருளி மகன் காளிராஜ் (45).இவர் கடந்த 2 ஆண்டுகளாக 18 ஆம் கால்வாய் அருகே ஜெயசந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் வேலை செய்து வந்தார். சம்பவ நாளில் காலில் பாம்பு கடித்து உத்தமபாளையம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி அரசு மருத்துவக்  கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.