தூத்துக்குடி, ஜூலை 8 தூத்துக்குடியில் 4 நாட்கள் நடைபெறும் பாரம் பரியமிக்க நெய்தல் கலை விழா வியாழனன்று மாலை கோலாகலமாகத் தொடங்கி யது. தமிழகத்தின் தனித்து வத்தையும், பண்பாட்டை யும் வெளிப்படுத்தும் வகை யில் தூத்துக்குடி மாவட்ட நிர் வாகமும், ஸ்பிக் நிறுவன மும் இணைந்து ‘நெய்தல்- தூத்துக்குடி கலை விழா’ என்ற விழாவை நடத்து கிறது. இந்த விழாவானது 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 4 நாட்கள் தூத் துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவ தும் இருந்து 300 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்று பல் வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த கலை விழாவில் உணவுத்திருவிழா வும் நடத்தப்படுகிறது. இதற் காக சுமார் 20 உணவு சார்ந்த அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், மக ளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட் களை விற்பனை செய்யும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொ துமக்கள் கண்டு ரசிக்க லாம். முதல் நாளான வியாழ னன்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி நெய்தல் கலைவிழா நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க் கண்டேயன், சண்முகையா, முன்னாள் அமைச்சர் தமிழரசி, எஸ்பி பாலாஜி சர வணன், ஆணையர் சாரு ஸ்ரீ, ஸ்பிக் நிறுவனத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட வருவாய் கோட்டாட் சியர் கண்ணபிரான், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.