தேனி ,மே.27 தேனி மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) -வியாழனன்று துவங்கி யது.ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் , ஆண்டி பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடி நாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரிய குளம் ஆகிய 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் 26.05.2022 முதல் 07.06.2022 வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 26 அன்று நடைபெற்ற ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட வரு வாய் கிராமங்களுக்கான 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் 7 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டாக்க ளையும்;, நலிந்தோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கணவரை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ. 1 இலட்சம் பெறுவதற்கான ஆணையினையும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆண்டிபட்டி வட்டத்தில் 265 மனுக்களும், போடி நாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 163 மனுக்க ளும், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் 210 மனுக்களும், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 101 மனுக்களும், மற்றும் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவல கத்தில்; 96 மனுக்களும் என மொத்தம் 835 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீதும் தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு பயன்கள் உடன் வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.