districts

எதிர்பாராத மழையால் விவசாயிகள் பாதிப்பு: உரிய இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், செப்.3 -  தஞ்சை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகை யில் தற்போது பெய்த திடீர்  மழையால், தஞ்சை மாவட்டத் தில் மெலட்டூர், பாபநாசம், திருவிடைமருதூர், கொத்தங் குடி, அன்னத்தோட்டம், புல வர்நத்தம் உள்ளிட்ட பகுதி களில் சாகுபடி செய்து அறு வடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேத மடைந்துள்ளன.  அதேபோல் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர்  காரணமாக ஆச்சனூர், மரு தூர், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களின் வாழைத் தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் 200-க்கும் மேற் பட்ட ஏக்கர் வாழை மரங்கள்  தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. மேலும்  சோளம், வாழை, கரும்பு  உள்ளிட்ட ஆயிரக்கணக் கான ஏக்கரில் பயிர் செய்யப் பட்டிருந்த சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது. 

பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் நெல் கொள் முதல் நிலையம் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நெல்  மூட்டைகள் சேதமடைந்துள் ளதாக தகவல் வந்துள்ளது. இந்த ஆண்டு பயிர்க் காப்பீடும் இல்லாத நிலை யில், விவசாயிகள் கடன் பெற்று ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து விவசாயம் செய்துள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  அதேபோல், நெல் கொள் முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்து  வைத்துள்ள நெல் மூட்டை களை, உடனடியாக தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை  பாதுகாப்பாக இயக்கம் செய்ய வேண்டும். மழை,  வெள்ளத்தால் பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண் டும். மேலும், ஒன்றிய மோடி  அரசுக்கு எதிராக நடை பெற்று வரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை செப்டம்பர் 7 வரை தொடர்ந்து நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோ கரன், சி.ஜெயபால், பி. செந்தில்குமார், என்.வி. கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சுரேஷ்குமார், கே. அரு ளரசன், என்.சிவகுரு, ஆர்.கலைச்செல்வி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;