மதுரை, ஜூலை 3- மதுரையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் விறு விறுப்பாக நடைபெற்று வரு கிறது. மதுரை மாவட்டத்தில் தே.கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனி யாபுரம், மதுரை கிழக்கு, மேலூர், அலங்காநல்லூர், மதுரை மேற்கு, செல்லம் பட்டி, வாடிப்பட்டி ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், இடைக்கமிட்டி மற்றும் கிளைச் செயலா ளர்கள் கட்சி உறுப்பினர்கள் வரை சந்தா சேர்ப்பில் ஈடு பட்டுள்ளனர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் தலைமை யில் தே.கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தா சேர்ப்பு நடைபெற்றது. ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய சந்தா சேர்ப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. ஜூலை 10-ஆம் தேதி வரை சந்தா சேர்ப்பு நடைபெறு கிறது. ஜூலை 2-ஆம் தேதி வரை ஒரு வருடம், ஆறு மாதம் என 100 சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜூலை 10-ஆம் தேதிக் குள் 500 சந்தாக்கள் சேர்க் கப்படும் என மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.