தூத்துக்குடி, நவ.18- தூத்துக்குடி மாநகர் பகுதி யில் கடந்த காலங்களைப் போல் மழை நீர் தேங்காதவாறு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரி வித்தார். மழைக்காலம் வந்து விட்டாலே தூத்துக்குடி மக்கள் மழை நீர் வடி யாமல் தவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக பிரையண்ட் நகர், சிதம்பரநகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகர், குமரன்நகர், ஸ்டேட்பேங்க் காலனி, அம்பேத்கர்நகர், எஸ். எஸ்.மாணிக்கபுரம், கதிர்வேல் நகர், தபால் தந்தி காலனி, திரவிய ரத்தினம் நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்க ளில் பெய்த மழையினால் இப்பகு திகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டு நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நிற்பது வழக்கம் இந்த நிலையில் செயின்ட் தாமஸ் பள்ளி செல்லும் சாலை கிருஷ்ணராஜபுரம் வெற்றிவேல் புரம் மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் எஸ்.எஸ் மாணிக்கபுரம் பகுதியில் நடைபெற்று வந்த மழைநீர் வடி கால் பணிகள் நிறைவு பெற்றதால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத் துக்குடி மாநகர் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தொ டர்ந்து தீவிர மாக பணியாற்றி வரு கிறோம். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். பிரையண்ட் நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்க் காலனி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதி களிலும் முடிந்த அளவிற்கு மழை காலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.