districts

மதுரை முக்கிய செய்திகள்

மனைவியை தீ வைத்துக் கொன்ற கணவன் 29 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குழித்துறை, பிப்.19- மார்த்தாண்டம் அருகே மனைவியை தீ வைத்து கொலை செய்த வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே  நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (59 ).  இவர் கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து மனைவியுடன் வசித்து வந்தார். மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் திருமணம்  நடந்து ஒன்றரை வருடத்தில் அவரது மனைவியை தீ வைத்து கொலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தனர்.   இந்நிலையில் 10 மாதங்களில்  ஜாமீனில் வெளியே வந்த தாஸ் திடீரென தலைமறைவானார். இதையடுத்து தாசை போலீசார் பல்வேறு இடங்களிலும்  தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது.  இந்நிலையில் தாஸ் கேரளா மாநிலம் கோட்டயத்தில் தலைமறைவாக இருந்ததாக கிடைத்த தகவலின் பெயரில் மார்த்தாண்டம் போலீசார் அவரை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னார்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

குழித்துறை, பிப்.19- குமரி மாவட்டம், புதுக்கடை அருகே சாத்தறை பகுதியில் காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர்  தீவிர கண்காணிப்பில் ஏற்பட்டனர். அப்போது சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர் .அப்போது அந்த நபரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதை  பறிமுதல் செய்து, மருதன்கோடு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சஞ்சய் (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.சஞ்சய் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

திருநெல்வேலி, பிப்.19- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் லிப்ட் வேலை செய்யாததால் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதிய வர் ரயிலில் அடிபட்டு மனைவி கண் முன்னே உயிரி ழந்தார். நெல்லை வண்ணாரப்பேட்டை பரணி நகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(77). இவர் தனியார் கார் நிறுவ னத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லலிதா (70). இவரது மகளுக்கு திருமணமாகி திண்டுக்கல் லில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிருஷ்ண மூர்த்தி  தனது மகளை பார்ப்பதற்காக மனைவி லலிதாவுடன் புதனன்று காலை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தார். செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயிலில் செல்வதற்காக முதலாவது நடைமேடைக்கு இரு வரும் வந்தனர். அங்கிருந்த மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யாததால் மனைவியை நடைமேடைக்கு படியில் செல்ல கூறி விட்டு கிருஷ்ண மூர்த்தி தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது 7.30 மணிக்கு மும்பை செல்ல இருந்த விரைவு ரயில் பணிமனையில் இருந்து நடைமேடையில் பின் னோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ண மூர்த்தி மீது ரயில் மோதியது. இதில் அதிர்ச்சியில் மயங்கி  விழுந்த கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே  உயிரி ழந்தார். இதைப்பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கிருஷ்ண மூர்த்தியின் உடலை மீட்டு கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தென் மாவட்டங்களில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் நெல்லை ரயில் நிலையமும் ஒன்று. ஆனாலும், ரயில்வே அதிகாரிகளால் ரயில் நிலை யங்களில் அடிப்படை தேவையான மின்தூக்கி, நகரும் படிகட்டுகள் உள்ளிட்டவற்றை பராமரிக்காமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரி விக்கின்றனர்.

மரச் செக்கு எண்ணெய்யில் கலப்படத்தை தடுத்திடுக! தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில். பிப். 19- மரச் செக்கு எண்ணெய் என்று அதில் கலப்படம் செய்வதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல இடங்களில் மர செக் எண்ணெய் என்ற பெயரில் தேங்காய்  எண்ணெய்யில் ரீபண்ட் ஆயில் கலப்பட மாக கலந்து விற்பனை செய்வது தெரிய வருகிறது. இதனால் தென்னை விவசாயி கள் வாழ்வாதாரம் அழிக்கப்படும். தென்னையை நம்பி வாழும் ஏழை எளிய குடும்பத்தினரின் வருமானம் குறைக் கப்படும் நிலை உள்ளது. இந்த கலப்பட எண்ணெய்யை பயன்படுத்துவதால் மக்களுக்கு நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த கலப்பட எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங் கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களையும், தென்னை விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க குமரி மாவட்ட தலைவர் என்.முருகேசன் தலை மையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாணவியை காலில்  விழ வைத்த சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணை

 தூத்துக்குடி, பிப்.19- கோவில்பட்டியில் மருத்துவச் சான்றிதழ் படிப்பு மாணவியை காலில் விழ வைத்து தாக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக இருப்பவர் கிருஷ்ண பிரியா. இங்கு தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா, நயினாம்பட்டியை சேர்ந்த பட்டியலின மாணவி மாலா வினோதினி(20) படித்து வந்தார். அங்கு மாணவி மாலா வினோதினிக்கும், சக மாணவி ஒருவருக்கும்  பிரச்சனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது..‌ இந்த பிரச்ச னையை விசாரித்த கண்காணிப்பாளர் கிருஷ்ணபிரியா மாலா வினோதினியை கன்னத்தில் அறைந்து, சக மாணவியின் காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்தார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்தை மாலா வினோதினியிடம் வாங்கிக் கொண்டு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் பள்ளி, கல்லுாரி சான்றிதழ்களை கொடுப்பேன் என்று கிருஷ்ணபிரியா மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து, மாலா வினோதினி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.  கோவில்பட்டி பயணியர் விடுதியில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம்  விசாரணை நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், துாத்துக் குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பிரிய தர்ஷினி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவ லர் பென்னட் ஆசீர், வன்கொடுமை தடுப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., ஜமால், கோவில்பட்டி போலீஸ் டி.எஸ்.பி., ஜெகநாதன், கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ராஜ்குமார், தாசில்தார் சரவணப்பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மருத்துவ சான்றிதழ் படிப்பு கல்வி நிறுவனத்தில் 4 மாணவிகள் மட்டுமே படிப்பதாகவும், கோவில்பட்டியில் கல்வி நிறுவனம் நடத்த மருத்துவத்துறையில் அனுமதி பெறாமலும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதில், படிக்கும் 4 மாணவிகளையும் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் படிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.