districts

img

பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

தேனி, செப்.3- பெரியகுளம் அருகே தோட்டத் தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரி ழந்த சம்பவம் அந்த  பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள பங்க ளாப்பட்டி சேர்ந்தவர் அரவிந்த்(34). பெரிய குளம் அருகே உள்ள தோட்டத்தில் மாட்டு  கொட்டை அமைத்து 20 மாடுகள் வளர்த்து  வந்துள்ளார்.இந்நிலையில்  சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கால்நடைகளுக்கு தீவனங்கள் போட்டு பராமரிப்பு செய்வதற்காக சென்று உள்ளார்.  மாடுகளை பராமரிக்கச் சென்ற கணவர் இரவு ஒன்பது மணி ஆகியும் வராத நிலை யில் மனைவி ஹேமாவதி அவரது உறவின ரான செந்தில்குமார் என்பவரிடம் தெரிவித்த  நிலையில் இருவரும் மாட்டுக் கொட்டகை யில் பார்க்கச் சென்றதாகவும், அப்பொழுது  செந்தில்குமார் மாட்டுக் கொட்டகை உள்ள  தோட்டத்தில் சுற்றிப் பார்க்கச் சென்றதாக வும், ஹேமலதா மாட்டுக் கொட்டகைக்கு சென்ற நிலையில் ஹேமலதாவும் மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலி யாகி உள்ளார்.   செந்தில்குமார் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த இடத்தில் இருந்த கம்பி வேலியைப் பிடித்தபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டித்த னர். பின்னர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பலியான கணவன் மனைவி உடலைக் கைப்பற்றி பிரேத உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.