மதுரை, ஜன.4- ஒமைக்ரான் தொற்று பரவல் காரணத்தினால் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டது. இதனால் மதுரை புதூரில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் மூன் றாம் பருவத்திற்கான தமிழக அர சின் விலையில்லா பாட புத்த கங்களை தலைமையாசிரியர் ஷேக் நபி, வகுப்பாசிரியர்கள் முகமது மாலிக், சண்முகசுந்தரம் ஆகியோர் மாணவர்களின் இல் லத்திற்கே நேரடியாக சென்று வழங்கினர். மேலும் தலைமையாசிரியர் மாணவர்களுக்கு பாடம் மற்றும் இணையவழி வகுப்புகள் சம்பந்தமாக அறிவுரைகளை வழங்கினார்.