districts

img

மலைவாழ் மக்கள் சங்க தேசிய மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

சின்னாளப்பட்டி,ஆக.18-   மலைவாழ் மக்கள் சங்கத்தின் தேசிய மாநாடு செப்டம்பர் 19 ,20, 21 ஆகிய தேதிக ளில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை விளக்கி  திண்டுக்கல்  மாவட்டம் நிலக்கோட்டை என்.புதுப்பட்டி யில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . மாநாட்டிற்கு  மூத்த தோழர் காளியப்பன் தலைமை தாங்கினார். குருசாமி முன்னிலை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர்  பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் அஜய் கோஷ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் காசிமாயன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சௌந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். கலைமணி நன்றி கூறினார்.  பொதுக்கூட்டத்தில் புதுப்பட்டி மக்கள் சார்பாக மாநாட்டு நிதி பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.