districts

img

பெரியகுளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை வீடு, மாட்டுக்கொட்டகை சேதம்

தேனி ,மே.19- பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக வீடு ,மாட்டுக்கொட்டகை சேதமானது . தேனி மாவட்டம், பெரியகுளம் ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்த குமார் என்பவரது வீட்டின் மாட்டுக்கொட்டகையில் இலவமரம் சாய்ந்தது. இதில் கொட்டகை முற்றிலும் சேதமடைந்ததுடன் இரண்டு மாடுகளின் கால்களும் உடைந்தன. இதேபோல் பெரியகுளம் எ.புதுக்கோட்டை  பங்களாப்பட்டி காலனியில் ஜெயராஜ், ஜெயக்குமார் ஆகியோரது வீடுகளின் மீதும் மரம் விழுந்ததில் லேசான சேதம் ஏற்பட்டது.முருகமலைப்பகுதியில் கொய்யா மரங்களில் இருந்து பூ, பிஞ்சுகள் அதிகளவில் உதிர்ந்துள்ளதுடன் மரங்களும் சாய்ந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் ,எண்டபுளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பாண்டி, பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷரீப் ஆகியோர் பார்வையிட்டனர்