districts

img

சுகாதார செவிலியர் மதுரை மாவட்ட மாநாடு

மதுரை, மே 23-  நகர சுகாதார செவிலியர்  மற்றும் பகுதி சுகாதார செவி லியர் சங்க மதுரை மாவட்ட  மாநாடு அரசு ஊழியர் சங்க  கட்டிடத்தில் மாவட்டத் தலை வர் பஞ்சவர்ணம் தலைமை யில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுப்பு லட்சுமி அஞ்சலி தீர்மானங் களை வாசித்தார். சர்மிளா தேவி முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் பர மேஸ்வரி வரவேற்று பேசி னார். செயலாளர் மணிச் செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.தோழ மைச்சங்க நிர்வாகிகள் இரா. தமிழ், சந்திரபோஸ், மகு டீஸ்வரன், கண்ணன்,  துரைக் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொருளா ளர் ஜான்சி ராணி நன்றி கூறி னார். வாரந்தோறும் 100 சத வீதம் புதிய கர்ப்பிணி தாய்  மார்களை பதிவு செய்யுமாறு சுகாதாரம் துணை இயக்கு னர் வாரம் வாரம் திங்கள் கிழமை பகுதிநேர சுகாதார செவிலியர் (SHNகளுக்கு கூட்டம் நடத்தி கடுமையாக நடந்து கொள்ளும் போக்கை கைவிட வேண்டும்.  கணினி  வேலை அதிகமாக இருப்ப தால் ஒவ்வொரு நகர  ஆரம்ப சுகாதார நிலையத் திற்கும் ஒரு கணினி பிரிவு  பணியாளரை பணிக்கு  அமர்த்த வேண்டும். பகுதி நேர செவிலியர்களுடன் பணியாற்றும் தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு  மூன்று மாத நிலுவை ஊதி யத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.