districts

img

தமுஎகச பொன்விழா: குறும்பட வெளியீட்டு விழா

மதுரை, ஜூலை 11- மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ குரு மீட்டிங் ஹாலில் மதுரை மாநகர் மாவட்ட தமுஎகசவின் ஜெய்ஹிந்துபுரம் மற்றும் பயாஸ்கோப் கிளைகள் தமுஎகச பொன்விழா தொடக்க நிகழ்வை ஒட்டி குறும்பட விழாவை நடத்தியது.

இவ்விழாவில் மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் கலந்து கொண்டு நமது கானல் சேனலின் ‘மாற்றம் ஒன்றே மாறாது’ குறும்படத்தை வெளியிட்டார். முன்னதாக குமார் லிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒலிம்பியா முருகன் தலைமையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.கண்ணன், மதுரை மாநகர் மாவட்ட தமுஎகச செய லாளர் ஸ்ரீரசா, மாநிலக்குழு உறுப்பினர் அ.ந.சாந்தாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

யமுனா சரவணக்குமார் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான  சம்பவங்களை பகிர்ந்தார். வைர பிரபு குறும்படத்தை பற்றிய செய்திகளைப் பகிர்ந்தார். விழாவில் பால்பாண்டி, பாண்டிச்செல்வி ஆகியோர் பாடல்கள் பாடினர்.

குறும்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த புரட்சித் தொண்டர், மூத்த தோழர் எம்.என்.ஆர் கௌரவிக்கப்பட்டார்.  மேலூர் மாவேந்தன், பொன்.விக்ரம் மற்றும் தமுஎகச, இ.ஜ.வா.ச, இ.மா.ச. அனைத்துக் கிளை தோழர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.  இந்து ராணி  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சுதாகர் ஜெயராமன் ஏற்புரையும், ஆர்.எம். பாபு  நன்றியுரையும் கூற விழா இனிதே நிறைவுற்றது.