districts

img

கருப்பாயூரணி- ஒத்தக்கடை வரை சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பைகள்-பிளாஸ்டிக் கழிவுகள்

மதுரை, நவ.27- மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் நெடுஞ்சாலை ஓரங்களில்  ஆங் காங்கே குப்பைகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் உரிய  முறையில் குப்பைகளை அகற்ற ஏற்பாடு கள் செய்யவில்லை என்று மக்கள் கூறு கின்றனர்.  இந்நிலையில் மதுரை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஒத்தக்கடை சந்திப்பு, வளர்நகர், உத்தங்குடி , உயர்நீதிமன்ற மதுரை கிளை, வேளாண் கல்லூரி, பத்தி ரப்பதிவு அலுவலகம், யானை மலை  அமைந்துள்ள நெடுஞ்சாலை ஓரங்களில்   டன் கணக்கில் கார் கம்பெனிகளில் பயன் படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக்  ஆயில் டப்பாக்கள், தெர்மாகோல் அட்டை கள், உணவகங்களில் உள்ள குப்பைகள்,  இறைச்சி கழிவுகள் மற்றும் பேட்டரி கழிவு கள், கட்டுமான கழிவுகள் கருப்பாயூரணி பகுதி தொடங்கி ஒத்தக்கடை சந்திப்பு வரை குவித்துவைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைகளை எரிப்பதால் புகை கிளம்பி சாலையை மறைக்கின்றன. குப்பை யில் பற்றப்படும் நெருப்புகளும் சாலை களில் பறந்து செல்கின்றன. சாலையோ ரங்களில் மனித கழிவுகள், இறைச்சிகள், உணவு கழிவுகளை கொட்டியுள்ளதால் தேசிய நெடுஞ்சாலை பகுதி முழுவதிலும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. ஒத்தக் கடை பகுதியில் உள்ள கண்மாய் அரு கிலேயே இறைச்சி கழிவுகளை கொட்டுவ தால் கண்மாய் நீர் பாழடையும் நிலை உள்  ளது. சம்பந்தப்பட்ட துறையினர் குப்பை களை உடனடியாக அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.