districts

img

நபிகள் நாயகம் பிறந்த தினம்: ரவுண்ட் ரோடு பள்ளிவாசலில் கந்தூரி விழா

திண்டுக்கல், டிச.1- நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆறாம் ஆண்டான கந்தூரி விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவில்  1600 கிலோ  அரிசி, 5 ஆடுகள், 50 கிலோ இஞ்சி, 60 கிலோ பூண்டு, 100 கிலோ சின்ன வெங்காயம், 60 கிலோ பெரிய வெங்காயம், 120 கிலோ தக்காளி, 600 கிலோ கத்த ரிக்காய் கொண்டு 26 அடுப்புகள் மூட்டி விடிய, விடிய முட்டையுடன் கூடிய நெய் பிரியாணி தயாரிக்கப்பட்டு அதிகாலை 6 முதல் ரவுண்ட் ரோடு புதூர், அனுமந்த நகர், பாலகிருஷ்ணாபுரம், நாகல் நகர், பேகம்பூர், மாசிலாமணிபுரம், அபிராமி நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு  சுமார் 15 ஆயிரம் பேருக்கு முட்டையுடன் கூடிய  நெய் பிரியாணி மற்றும் தால்சா வழங்கப்பட்டது.