மாவட்ட ஆட்சியர் தகவல் சிவகங்கை, ஜூலை 13- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறி விக்கப்பட உள்ள குரூப்.1- குரூப்.2 ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 14.07.2023- அன்று முதல் சிவ கங்கை மாவட்ட ஆட்சியரக மயில்கேட் அரு கில் உள்ள சிவகங்கை படிப்பு வட்டத்தில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது. எனவே இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வேலைநாடுநர்கள் bit.ly/tnpscclass என்ற இணையதள முகவரியில் விண்ணப் பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04575 245225 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணு கியோ இந்த இலவசப் பயிற்சி வகுப்பிற் கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் செயல்படும் நூல கத்தையும் பயன்படுத்தி போட்டித் தேர் விற்கு தங்களை தயார் செய்து கொண்டு பயன்பெறலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக தொடங் கப்பட்டுள்ள tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து கொண்டு, இவ்விணையதளத்தில் ஒன்றியஃமாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வு களுக்கான பாடக்குறிப்புகள் வினாவிடை கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இல வசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெற லாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.