districts

வீடுகட்டித் தருவதாகக் கூறி ரூ.45 லட்சம் மோசடி

தேனி, ஜூன் 12- போடிமெட்டில் வீடு கட்டித் தருவதாகக்  கூறி கேரளத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.45 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி  செய்ததாக மூன்று பேரை திங்கள்கிழமை, மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். கேரளத்தைச் சேர்ந்தவர் ராகுல் ஜேக் கப் மனைவி ராஜீ மேத்யூ. இவர், துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை  செய்து வந்தார். ராஜீ மேத்யூவிற்கு போடி மெட்டு பகுதியில் சொந்தமாக இடம் உள்  ளது. இந்த இடத்தில் வீடு கட்டித் தருவ தற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு பெரிய குளம், வடகரையைச் சேர்ந்த சேக்முஹ மது மகன் முஹமது என்பவரிடம் ராஜீ  மேத்யூ இரண்டு தவணைகளில் மொத்தம்  ரூ.45 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முஹமது, கட்டட வேலையை முழுமையாக செய்து முடிக்காமல் இருந்து வந்துள்ளார். இத னால், அவரிடம் ராஜீ மேத்யூ பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். பணம் செலவாகி விட்டதாகவும், அதற்குப் பதிலாக பெரிய குளம் அருகே எண்டப்புளியில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தை கிரையம் செய்து கொடுத்து விடுவதாகவும் கூறிய முஹமது, இடத்தை கிரையம் செய்து தரு வதற்கு ஆவணச் செலவிற்காக ராஜீ மேத்யூ விடம் ரூ.8 லட்சம் கேட்டுள்ளார். பின்னர், கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜீ  மேத்யூவிடமிருந்து ரூ.8 லட்சத்தை பெற்றுக் கொண்டு எண்டப்புளியில் உள்ள இடத்தை  முஹமது கிரையப் பத்திரம் பதிவு செய்து  கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

முஹமது கிரையம் செய்து கொடுத்த இடம் பஞ்ச மர் ஜாரி நிலம் என்பது தெரிய வந்ததால், இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அந்த  இடத்திற்கு மாற்றாக வீரபாண்டி அருகே  சத்திரபட்டியில் உள்ள காலி மனை யிடத்தை ராஜீ மேத்யூவிற்கு பத்திரம் பதிவு  செய்து கொடுப்பதாகக் கூறினாராம். அந்த  இடம் ஏற்கனவே வங்கி பிணையத்தில் இருந்ததால், தனக்குப் பணத்தை திரும்பத்  தருமாறு ராஜீ மேத்யூ, முகமதுவிடம் கேட்  டுள்ளார்.  இதையடுத்து, முஹமது தனது நண்பர்கள் பெரியகுளம், வடகரையைச் சேர்ந்த பிரபாகரன், தேனி அருகே அரண்  மனைப்புதூர், வசந்த நகரைச் சேர்ந்த  மரக்காமலை ஆகியோரின் பெயரில் வங்கிக் கணக்கில் பணமின்றி காசோலை களை கொடுத்தும், பணத்தை திரும்பத்  தராமலும் தன்னை மோசடி செய்ததாக வும், இதற்குப் பிரபாகரன், மரக்காமலை ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிர வீன் உமேஷ் டோங்கரேவிடம் ராஜீ மேத்யூ  புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்திய மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், முஹமது, பிரபா கரன், மரக்காமலை ஆகிய மூன்று பேரை  கைது செய்தனர்.