சிவகாசி. அக்.13- பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 30 ஆண்டு கால மாக போனஸ் உயர்த்தப்படவில்லை. எனவே, 50 சதவீத போனஸ் வழங்க வேண்டும், பட்டாசு-தீப்பெட்டி தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் குறித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதை உடனடியாக அமல் படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவு எனக் காரணம் கூறி பட்டாசு ஆலை களில் அரசு அதிகாரிகள் அத்துமீற லில் ஏற்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி யில் பட்டாசு-தீப்பெட்டித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் பி.என்.தேவா தலைமை வகித்தார். நகரத் தலைவர் வி.முருகன், ஒன்றி யத் தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்ட துணைச் செயலாளர் கே.முருகன் பேசினார். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி. பாண்டியன் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில். மாவட்ட பொருளா ளர் ஜெபஜோதி, மாவட்ட நிர்வாகிகள் கே,கண்ணன், பிச்சைக்கனி, ஏ.சீனி வாசன், நகர பொருளாளர் பாப்பா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.