districts

img

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு

கோவை, அக்.14- கோவை அருகே 20 வயது  மதிக்கதக்க பெண் யானை வெள்ளி யன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் இருந்து  கேரள  மாநிலத்திற்கு கோவை வழியாக  நாள்தோறும் நூற்றுக்கும் மேற் பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வரு கிறது. இதில் மதுக்கரையிலிருந்து கேரள மாநிலம், வாளையார் வரை  12 கிலோ மீட்டர் வனப்பகுதியில் ரயில் பாதை அமைந்துள்ளது. இப் பாதையில் அவ்வப்போது  தண்ட வாளத்தை கடக்கும் யானைகள்  ரயிலில் மோதி உயிரிழப்பது  தொடர்கிறது. கடந்த சில மாதங் களுக்கு முன்பு தமிழக எல்லை யான வாளையாறு அருகே ரயில்  மோதியதில் 3 யானைகள் உயிரி ழந்தன. இதனையடுத்து யானை களின்  நடமாடத்தை கண்டறியும்  வகையில், வனத்துறை மற்றும்  ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு  கேமரா பொறுத்த முடிவு செய்யப் பட்டு, அதற்கான சோதனை முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில் கேரள மாநிலம், வாளையார்-கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் வியாழனன்று இரவு 17  யானைகள் வந்துள்ளது. இதனை  தொடர்ந்து வெள்ளியன்று அதி காலை 3.40 மணியளவில் யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.  அப்போது  கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி செல்லும் எக்ஸ் பிரஸ் ரயில் வந்த நிலையில் தண்ட வாளத்தை கடக்க  முயன்ற சுமார்  20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது ரயில் மோதியது இதில்  யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உடன் வந்த குட்டி யானை ஒன்றும் அடிபட்டுள்ளது. அது அடிபட்ட அதிர்ச்சியில் வனப் பகுதிக்குள் ஓடியுள்ளது. இதற்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்த விபத்து குறித்து ரயில் ஓட்டுனர் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ரயில் அதிவேகமாக  இயக்கப்பட்டதா? என்ற கோணத் திலும் வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.