இராஜபாளையம், ஏப்.6- இராஜபாளையத்தில் நகைக் கடன் தள்ளுபடி தெரிவு செய் யப்பட்டவர்களுக்கு உடனடியாக நகை கடன் தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஏ.ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.முருகன் விளக் கிப் பேசினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், விவ சாயிகள் சங்க செயலாளர் முனிய சாமி, நீராத்தலிங்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை அறிந்த வங்கி யின் தலைவர் ஆர்.எம்.குரு சாமி, விவசாயிகள் சங்க தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முரு கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் வங்கி யின் தலைவர் தேர்வு செய்யப் பட்டு நகை கடன் தள்ளுபடி கிடைக்காத அனைவருக்கும் தள்ளுபடி வழங்கக்கூடிய வகை யில் முடிவு செய்யப்பட்டது.