districts

img

சிபிசிஐடி விசாரணை கோரி திண்டுக்கல் ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 21- அம்மையநாயக்கனூர் காவல்  நிலையம் முன்பு காவல்துறையின ரின் மெத்தனத்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி பாண்டி  தொடர்பான வழக்கில் சிபிசிஐடி  விசாரணை நடத்த வேண்டும். ஆய்  வாளர் சண்முக லட்சுமியையும் காவலர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகம் முன்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத் தியது.  ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின்  அகில இந்திய துணைத்தலை வர் பெ.சண்முகம் பேசுகையில்,  முதலமைச்சர் பொதுமக்களுடைய குறைகளை. கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள  வேண்டும். இந்த வழக்கில் காவல்ஆய்வாளர் சண்முக லட்சுமி  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தோடு நின்றுவிடக்கூடாது. அடுத்து  காவல்துறை அதிகாரிகள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயி குடும் பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்.  ஒரு முன்னாள் ஐ.ஜி.க்கு எப்படி 200 ஏக்கர் நிலம் கிடைத்தது. அவ ரிடம் விற்பனை செய்வதற்காக பள்ளபட்டி பகுதியில் விவசாயிகள்  என்ன வரிசையில் நின்று கொண்டி ருந்தார்களா? அவருக்கு இந்த சொத்து எப்படி வந்தது என்று விசா ரணை செய்ய வேண்டும். அவரது நிலத்தை மேற்பார்வை செய்து  

வந்த நாச்சியப்பன், சின்னக்கருப் பன், வழக்கறிஞர் சங்கர் ஆகியோர்  விவசாயி பாண்டியின் இரண்டரை ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற னர். அதற்கு முன்னாள் ஐ.ஜி.யின்  மகன் செந்தில் ராஜ் போஸ், வழக்க றிஞர் செல்வம் ஆகியோரது யோச னையின் பேரில் தான் தொடர்ந்து விவசாயி பாண்டி மிரட்டப்பட்டு வந்  தார். நிலக்கோட்டை நீதிமன்றத்தில்  பாண்டியின் மகன் வழக்கு தொடர்ந்  தார். இதையடுத்து ஆய்வாளர் சண்முக லட்சுமி பாண்டியின் வீட்  டுக்கு சார்பு ஆய்வாளர் சேகரை அனுப்பி மிரட்டியுள்ளார். இந்நிலை யில்தான் பாண்டி காவல்நிலையம் முன்பு தற்கொலை செய்து கொண் டுள்ளார். ஆய்வாளர் சண்முக லட்  சுமி உள்ளிட்ட பணியிலிருந்த அனைத்து காவலர்களையும் பணி  நீக்கம் செய்ய வேண்டும். இந்த  வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநி லப் பொருளாளர் கே.பி.பெரு மாள், மாவட்டத்தலைவர் என்.பெருமாள், மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, பொருளாளர் தயா ளன்,சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம்,முன்னாள் மாநிலத்தலைவர் பி.செல்வராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.