இராமநாதபுரம்,செப்.20- இராமநாதபுரம் எல்ஐசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பாக சக்கரக்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வேற்றுமையில் ஒற்றுமை ,சுதந்திர இந்தியாவின் கனவு என்ற இரு தலைப்புகளில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் தாஸ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்று பேசினார். இந்தியாவிற்கான மக்கள் இயக்க தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவருமான ஜெகதீசன் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த கட்டுரைப் போட்டிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர் முத்துமணி செய்திருந்தார். கிளை பொறுப்பாளர் சேசு நன்றி கூறினார்.