districts

img

இறந்த உடல்களைத் தோண்டி வெளியில் போடும் நாய்கள்

தேனி, ஜூன் 26- தேனியில் குறைந்த ஆழத்தில் புதைக்கப்பட்ட பிணங்  களை நாய்கள் தோண்டி வெளியில் போடுவதால் குடி யிருப்புப் பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஆட்சி யர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தேனி தாலுகா தலைவர் முத்துக்குமார், செயலாளர் டி.நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகி கள் ஆட்சியரைச் நேரில் சந்தித்து மனு அளித்தனர் மனு வில், தேனி நகராட்சி மின் மயானம் அருகே 100- க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அந்த குடியிருப்பு  பக்கத்தில் உள்ள அரசு நிலத்தில் அரசு மருத்துவமனை யில் இறந்த குழந்தைகள் மற்றும் இறந்தவர்களின் உடல்  களை குறைந்த ஆழத்தில் புதைக்கின்றனர். உடல்களை நாய்கள் அவற்றை தோண்டி வெளியில் போட்டு பெரும்  சுகாதார கேட்டை உருவாக்கி வருகின்றன. இறந்த உடல்கள் புதைக்கப்படுவதை நிறுத்தி ,அந்த இடத்தில்  இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகள் அருகே போதை பொருட்கள் தேனி அல்லிநகரம், சரத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் அருகே  உள்ள கடைகளில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாணவர்கள் இதை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. விற்பனை யைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாலிபர் சங்க  நிர்வாகிகள் மனு அளித்தனர்.