மதுரை, ஜன.5- மதுரை மாவட்டம் அவனி யாபுரத்தில் தை முதல் நாளன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை, அவனியாபுரம் கிராமப் பொதுமக்கள் மூலமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டி கமிட்டி சார் பில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், அனைத்துக் கட்சியினர், கிராமப் பொது மக்கள் என 300-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு, 2023 ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை அவனியாபுரம் கிராம பொதுமக்களே நடத்து வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முழக்கங் களை எழுப்பினர். 2023-ஆம் ஆண்டிலா வது ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை, தனிநபர்களிடம் ஒப்படைக்கப்படாமல் தங் கள் வசம் ஒப்படைக்கப்படும் என்று கிராமப் பொதுமக் கள் எதிர்பார்த்து இருந்துள் ளனர். ஆனால், தென்கால் பாசன விவசாயிகள் சங் கம் என்ற பெயரில் இயங்கும் தனிநபர்கள், ஜல்லிக்கட்டு நடந்தால் எங்கள் தலைமை யில்தான் நடக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்ததாக தெரி கிறது.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி இரண்டு தரப்பி னரையும் அழைத்து, பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் தீர்வு எட்டப் படாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தாண்டு மாவட்ட நிர்வா கமே ஜல்லிக்கட்டு போட்டி யை நடத்தும் என்று தக வல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அவனி யாபுரம் கிராமப் பொதுமக் கள் சார்பிலேயே ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி யினர் வியாழனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். கமிட்டி தலைவர் முரு கன் தலைமை வகித்தார். கண்ணன், வழக்கறிஞர் அன் பரசன், தீத்தி பிச்சை, சிவ மணி, முனியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். விடு தலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான வி.பி. இன்குலாப், மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் முத்து லட்சுமி அய்யனார், காங்கி ரஸ் சார்பில் கஜேந்திரன், குமரையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் அ.தன பாலன், அதிமுக சார்பில் கார்த்திகேயன், சமூகநீதிக் கல்வி பண்பாட்டு மையம் சார்பில் சி.சிவனாண்டி உள்பட 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.