தேனி, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனு மதி அளிக்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைக் கண்டித்தும், போதைர் பொருட்களைத் தடை செய்து போதையில்லா தமிழகம் என அறிவிக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போடி யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். மீனா தலைமை வகித்தார். தேனி மாவட்டத் துணைத் தலைவர் சு. வெண்மணி, என்.அம்சமணி, எம்.சுதா, ஆர்.தனலட்சுமி, ஆர்.ஜோதிமணி, எஸ்.ஈஸ்வரி, காந்தியம்மாள், பாக்கியம், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் கே.ராஜப்பன், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் தங்கபாண்டி, உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர்.