districts

img

நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தில் பணி கோரி ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் ஏ.பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கணேசன், தாலுகா தலைவர் ஏ.அருள்சாமி, தாலுகாச் செயலாளர் ஆர்.சேதுராமன், தாலுகா பொருளாளர் ஏ. நாகநாதன் ஆகியோர் விளக்கிப் பேசினர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு ஆதரித்துப் பேசினார். சங்க மாவட்டத் தலைவர் நா.கலையரசன் நிறைவுரையாற்றினார்.