தேனி, ஆக.6- மணிப்பூரில் கலவரத்தை கட்டுப் படுத்தி அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெண்களை நிர்வாணப்படுத்தி பாலி யல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலவரத்தை தடுக்கத் தவறிய மாநில பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் மற்றும் உண்ணாவிரதம் நடை பெற்றது. தேனி மாவட்டம், பழனிசெட்டி பட்டியில் திமுக தோழமை கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திமுக அவைத் தலைவர் ஜோதி ராம் தலைமை வகித்தார் .திமுக பேரூர் செயலாளர் செல்வம் ,மகளிர் அணி தலைவர் பவானி ஆகியோர் முன் னிலை வகித்தனர் .மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை கண்டன உரை யாற்றினார். தாலுகா செயலாளர் இ. தர்மர், காங்கிரஸ் மாவட்டப் பொருளா ளர் பாலசுப்பிரமணி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வி.ராஜேந்திரன், வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ணைபுரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பண்ணைபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி துணைத் தலைவரும், மாவட்டக் குழு உறுப்பினருமான எஸ்.சுருளிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு. வெண்மணி கண்டன உரையாற்றினார். ஏரியா செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் சி.வேலவன், ஏரி யாக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. பிரிட்டோ தலைமையில் ஞானஒளிவு புரத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற் றது. மாவட்ட துணைச் செயலாளர் டி. ஜான் மைக்கேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.அன்பின் ராஜா, ஏ. சப்னம், எஸ்.சம்சு பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலை வர் கே.அலாவுதீன், செயலாளர் என்.கணேச மூர்த்தி, பல்சமய உரையாடல் பணிக்குழு செயலர் ஜே.பெனடிக் பர்ணபாஸ், சமயநல்லூர் பங்கு தந்தை எஸ்.எம்.பால் பிரிட்டோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில துணைத்தலைவர் எம். பாலசுப்பிரமணியம் உரையாற்றினார். சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.இ. ஸ்டீபன் நன்றி கூறினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை. ஜெனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூர் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் மற்றும் மேலூர் மகளிர் இயக் கம் சார்பில் கிறிஸ்தவ அரசர் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலூர் ஆர் சி சபை இறைமக்கள் அந்தோணி பாக்கியம் தலைமை வகித் தார். கிறிஸ்தவ வாழ்வுரிமை பொறுப்பா ளர்கள் இருதயராஜ், ஆல்வின், சேவி யர், மகளிர் இயக்கம் சார்பில் ஜோஸ்பின் ஜாபரின் குளோரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உறங்கான்பட்டி
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரத அறப் போராட்டம் உறங்கான்பட்டியில் ஞாயிறன்று நடை பெற்றது. ம.திருநாவுக்கரசு (காங்கி ரஸ்) தலைமை வகித்தார். காங்கிரஸ் ஆர்.வைரவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தாலுகாக் குழு உறுப்பினர்கள், சிபிஐ சார்பில் க.மெய்யர், என்.திலகர் ஆகி யோர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.