districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஆன்-லைன் அபராதத்தை கைவிட வேண்டும்

சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்.31 - சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி 3 ஆம் ஆண்டு பேரவை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திங்க ளன்று நடந்தது.  கூட்டத்திற்கு பகுதித் தலைவர் ராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். சிஐடியு  மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் வீரமுத்து, மாநகர் மாவட்டப் பொருளாளர் சுரேஷ், ஸ்ரீரங்கம் பகுதி  செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  ஸ்ரீரங்கம் பகுதிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும்  வெளியூர் பக்தர்களுக்கு வாகன நிறுத்து மிடம் அமைத்து தர வேண்டும். நலவாரி யத்தை முழுமையாக முறைப்படுத்த வேண் டும். ஆன்-லைன் அபராதத்தை கைவிட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்திருத் தத்தை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். ஸ்ரீரங்கம் பகுதி தலைவ ராக ராஜமாணிக்கம், செயலாளராக சுப்ர மணியன், பொருளாளராக சீனிவாசன் உள்பட 15 பேர் கொண்ட தொகுதி குழு தேர்வு  செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் பகுதி பொருளா ளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

பணிமாறுதலில் செல்லும்  வட்டாட்சியருக்கு பாராட்டு

தஞ்சாவூர், அக்.31 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியராக கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற த.சுகுமார், தமது அர்ப்பணிப்பு மிக்க பணியால் தாலுகாவில் உள்ள,  அனைத்து தரப்பு மக்களின் பேரன்பை பெற்றவர். இவ ருக்கு பணிமாறுதல் என்றவுடன், பணிமாறுதல் செய்யக்கூடா தென நூற்றுக்கணக்கான மக்கள் பேராவூரணி கடை வீதியில் திரண்டு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.  சுமார் 1500 பேருக்கு மேல் ஏழை, எளிய மக்கள் பயன்பெ றும் வகையில் இலவச வீட்டுமனைப் பட்டா இவரது பணிக்  காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத சாதாரண ஏழை- எளிய மக்களின் பல பிரச்சனைகள் தீர்ந்துள்ள தால், இவரது பணியை பாராட்டி பேராவூரணி பகுதி சமூக  ஆர்வலர்கள், பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள்,  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலக ஊழியர்கள்  இவரை வாழ்த்தினர்.

பல்கலை.ஆசிரியர்கள் போராட்டம்

மயிலாடுதுறை, அக்.31 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு  கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் வாயில்முழக்க போராட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி  மேம்பாட்டு பணப்பலன் வழங்க வேண்டும். எம்.பில், பி.ஹெச்.டி பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க  வேண்டும். முனைவர் பட்ட நிபந்தனைக்கு விலக்கு அளிக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலப் பொருளாள ரும், கல்லூரி கிளைத் தலைவருமான சேவியர் செல்வ குமார் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயராஜ் வர வேற்றார். பேராசிரியர்கள் பலர் உரையாற்றினர். கிளை துணைத் தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.

தனியார் பேருந்து மோதி முதியவர் பலி

அரியலூர், அக்.31- அரியலூரை அடுத்த எருத்துக்காரன்பட்டி, அண்ணாநகர்,  ரயில் நிலையம் செல்லும் சாலையில் வசிப்பவர் ஆ.சண்முகம்  (74). திங்கள்கிழமை இரவு இவர், ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ரவுண்டானா சாலையில் இரு சக்கர வாக னத்தில் வந்தபோது, தஞ்சாவூர் நோக்கிச் சென்ற தனியார்  பேருந்து மோதி காயமடைந்தார். தகவலறிந்து வந்த அரிய லூர் நகர காவல்துறையினர், அவரை மீட்டு அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்து  காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

வகுப்பறை வசதி இல்லை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

தஞ்சாவூர், அக்.31 -  வகுப்பறை கட்டடம் கேட்டு, பள்ளிக்கு  பிள்ளைகளை அனுப்ப மறுத்து பெற் றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேரா வூரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (மேற்கு) அமைந்துள்ளது. இப்பள் ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 65-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  தலைமை ஆசிரியர் ஒருவர், உதவி  ஆசிரியர் ஒருவர் பள்ளியில் பணியாற்றி  வருகின்றனர். இப்பள்ளியில் ஏற் கனவே ஐந்து வகுப்பறை கொண்ட கான் கிரீட் கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம்  பழுதடைந்து அடிக்கடி சிமெண்ட் காரை கள் பெயர்ந்து விழுந்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அது இடித்து அகற்றப்பட்டது.  அதன்பிறகு தற்காலிகமாக அமைக் கப்பட்ட ஒரு தகரக் கொட்டகையில், ஐந்து வகுப்புகளும் இயங்கி வரு கின்றன. இதனால் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும் போது மற்ற வகுப்பு களுக்கு பாடம் நடத்த முடியாமல் ஆசிரி யர்களும், பாடங்களை புரிந்து கொள்ள  முடியாமல் மாணவர்களும் தவித்து வந்தனர்.  இந்நிலையில் பேராவூரணி பகுதி யில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி கன மழை பெய்து வருகிறது. தகரக் கொட்ட கையில் பக்கவாட்டு தடுப்புச் சுவர்  இல்லாததால், மழைநீர் வகுப்புகளுக் குள் புகுந்தது. இதில், மாணவ-மாணவி களின் புத்தகங்கள் நனைந்தும், மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிள்ளை களை அருகில் உள்ள கோவிலில் தங்க  வைத்தனர். குழந்தைகள் சீருடையுடன் கோவிலிலேயே தங்கினர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறு கையில், “பள்ளிக்கு நிலையான கான் கிரீட் கட்டிடம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சியர், எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித்  துறை அலுவலர்கள் என பலரிடம் மனு  அளித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  உடனடியாக கட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அதிகாரிகள், அதனை செயல்படுத்த மறுக்கின்றனர். பாதுகாப்பான கட்டிடம் இல்லை என்ப தால் 12-க்கும் மேற்பட்ட குழந்தை களை, பெற்றோர்கள் வேறு பள்ளியில்  சேர்த்துள்ளனர். தகரக் கொட்டகை யுடன் பக்கவாட்டுச் சுவர் இல்லாத தால் மாணவர்களின் உடல்நிலை பாதிக் கப்படுகிறது. எனவே, வகுப்பறை கட்டடம் கட்டாவிட்டால் எங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி பெற்றோர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அங்கு வந்த வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல் வேந்திரன், காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர், உதவி ஆய்வாளர் ராம் குமார் மற்றும் கல்வித் துறை அலுவ லர்கள் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு  காணலாம் என தெரிவித்தனர். இதை ஏற்காத பெற்றோர்கள், தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், காலை 11:30 மணியளவில் வெளியூரில் இருந்த சட்டமன்ற உறுப் பினர் நா.அசோக்குமார், அலைபேசி மூலம் பெற்றோர்களிடம் பேசினார். விரைவில் பள்ளிக்கு கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். இதனை  ஏற்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

திமுக மூத்த தலைவர்  ஆர்.பி. சுப்பிரமணியன் காலமானார்

திருவாரூர், அக்.31 - திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும் மூத்த  தலைவருமான ஆர்.பி.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை  காலமானார். இவர் திருவாரூர் ஒன்றியம், புலிவலம்  பகுதியில் வசித்து வந்தார். மறைந்த தோழர் சுப்பிர மணியன், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நீண்டகால நண்பர். இவரது மறைவு செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், எம்.கலை மணி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பை யன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் ஆகி யோர் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நடை பெற்றது. 

குடிநீர் வழங்காததைக் கண்டித்து  சம்பட்டிவிடுதி மக்கள் மறியல்

புதுக்கோட்டை, அக்.31- சம்பட்டிவிடுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையை அடுத்த சம்பட்டி விடுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி யில் கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வர வில்லை எனக் கூறப்படுகிறது.  வெகு தொலைவிற்கு சென்று தண்ணீர் எடுத்து  வரக்கூடிய அவலநிலை இருப்பதாகவும், குடிநீரை காசு  கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை புதுக் கோட்டை - கறம்பக்குடி சாலையில் சம்பட்டிவிடுதி நால் ரோட்டில் காலிக் குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர்  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு  உதவிகள் வழங்கல்

அறந்தாங்கி, அக்.31 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் வீடு சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டயாப்பர் மற்றும் நாப்கின் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. வட்டார  வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தலைமை வகித்தார்.  ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடு சார்ந்த  மாற்றுத்திறன் மாணவர்கள் 42 பேருக்கு டயாப்பர் மற்றும் நாப்கின்கள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள், சிறப்பா சிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் செல்வ குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்னையை தோட்டக் கலைத்துறையில் சேர்க்க விவசாயிகள் எதிர்ப்பு

தஞ்சாவூர், அக்.31-  தென்னை சாகுபடியை வேளாண்மைத் துறையில் இருந்து தோட்டக் கலைத் துறைக்கு மாற்றம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், செவ்வாய்க்கிழமை விவசாயிகள்  குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், “காவிரியில் உரிய தண்ணீர் வராததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி யும், சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயி ரம் இழப்பீடு வழங்க வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய நவ.15 ஆம் தேதி கடைசி நாள் என  கூறப்பட்டுள்ளது. தற்போது போதிய தண்ணீர் இல்லாததால், சில இடங்களில் மழையை எதிர்பார்த்து காலதாமதமாக சம்பா  நடவு தொடங்க உள்ளது. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவ சாயிகள் கோழிப்பண்ணை தொடங்க, கடந்த  இரு ஆண்டுகளாக அதற்கான மானியம் வழங்கவில்லை. இதனால் இந்த திட்டத்தை விவசாயிகள் செயல்படுத்தாமல் உள்ளனர். விவசாயம் சார்ந்துள்ள கோழிப்பண்ணை தொடங்கி விவசாயிகளுக்கு உரிய மானி யத்தை வழங்க வேண்டும். வேளாண்மைத் துறையின்கீழ் செயல் பட்டு வந்த தென்னை சாகுபடியை, தோட்டக்  கலைத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமல் வெளியிட்ட இந்த அரசா ணையை தமிழக அரசு திரும்ப பெற்று, பழையபடி வேளாண்மைத் துறையின் கீழ் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பூதலூர், தஞ்சாவூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய  பகுதிகளில் அதிகளவு ஏரி, குளங்கள் உள்ளன. ஆனால் தற்போது எங்கும் தண்ணீர்  தேக்க முடியாத நிலை உள்ளது. உடனடி யாக ஏரி, குளங்களை தூர்வாரி மழை பெய்யும் போது தண்ணீரை தேக்கி வைக்க  ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது மாவட்டத்தின் பல இடங்க ளில் குறுவை அறுவடை பணிகள் நடை பெற்று வருகின்றன. நெல் கொள்முதல் நிலை யங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். எனவே 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன் வரவேண்டும்” என வலி யுறுத்தினர். முன்னதாக, வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, விவசாயிகள் முன்னிலையில், ஆட்சியர் தீபக்  ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது
இலங்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே!
மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் அறிக்கை

தஞ்சாவூர், அக்.31-  இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளது இலங்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஒன்றிய அரசு உடனடி யாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்கா விட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி  போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு  மீனவர் பேரவை மாநிலச் செயலாளரும், மீனவர் நலவாரிய உபதலைவருமான மல்லிப் பட்டினம் தாஜுதீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் தவறான திட்டங்களால் மீனவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும், கடந்த 10 ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மீன வர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை இல்லாமல் மீனவர்கள் வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்  செய்வதும், மீனவர்களை கைது செய்வதும்  வாடிக்கையாக உள்ளது.  இதனால் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஒன்றிய  அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்தி,  மீனவர்களையும் மீனவர்களின் படகுகளை யும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை பறி முதல் செய்து, மீனவர்களையும் கைது செய்தி ருப்பதை இலங்கை அரசின் அத்துமீற லாகவே கருத வேண்டியுள்ளது.   கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில், இலங்கை தூதரக அலுவல கம் முன்பு இலங்கை அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத் தில் பல்வேறு பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத் தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்திருப்பதாக சந்தேகிக்கிறோம்.  தீபாவளி பண்டிகை நேரத்தில் இந்த கைது மிகவும் கண்டனத்துக்குரியது. உடனடி யாக ஒன்றிய அரசு தலையிட்டு மீனவர்களை யும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால் ஒட்டுமொத்த தமிழக மீனவர் களையும் ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு  எதிராக போராட்டம் நடத்தப்படும்” என தெரி வித்துள்ளார்.