districts

img

அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி கோரிக்கை

தென்காசி,நவ.15- தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியம் ஆய்க் குடி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை மிகவும் அதி கரித்துள்ளது.  வீடுகளில் உள்ள போர்களில் தண்ணீர் இல்லா மல் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே குடிநீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு அடவிநயினார் அணையில் இருந்து ஆய்க் குடியில் உள்ள நல்ல தண்ணீர் பெட்டைகுளம், மல்லபுரம் ஆகிய இரண்டு குளத்திற்கு போர்க் கால அடிப்படையில் உடனடியாக தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்க்குடி கிளை சார்பில் மனு கொடுக்கப் பட்டது. மனு கொடுக்கும் இயக்கத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.