நீர்வரத்தின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்
தேனி, ஏப்.8- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப்பகுதி யில் கடந்த ஒரு மாதமாக மழையின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் கடந்த சிலநாட்களுக்கு முன்பு விநாடிக்கு 204 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் 100கனஅடியாக குறைந்தது. நேற்று மழை பெய்யாததால் நீர்வரத்து இல்லாமல் வறண்டது. அணைநீர்மட்டம் 116.40அடியாகவும் (மொத்த உயரம் 152அடி), நீர்வெளியேற்றம் 100 கனஅடியாகவும் உள்ளது. நீர்வரத்தில்லாத நிலையில் குடிநீருக்காக 100கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
கல்குவாரியில் விபத்து: ஒருவர் பலி
சிவகாசி, ஏப்.8- சிவகாசி அருகே உள்ளது துரைச்சாமிபுரம். இங்கு சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான வி.கே கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், டிப்பர் லாரி ஒன்று கற்களை ஏற்றிக் கொண்டு மேடான பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் லாரி ஓட்டுநர் பொன்னுச்சாமி (60) சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை திருமணம் செய்த வழக்கறிஞர் கைது
மதுரை, ஏப்.8- மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் வசந்த் குமார் (27).இவருக்கும் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்புளாம்பட்டியை சேர்ந்த 15 வயது சிறு மிக்கும் மேலூர் கொட்டக்குடி கிராமத்தில் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதாக மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலர் ப.பரமேஸ்வரி ஆகியோருக்கு தக வல் கிடைத்தது. இதையடுத்து இவர்களின் உத்தரவின் பேரில் சமூக நலத்துறையை சேர்ந்த விரிவாக்க அலுவல ரால் காப்பகத்தில் மீட்டு வைக்கப்பட்ட சிறுமியிடம் விசா ரணை செய்து மதுரை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதில் வசந்த் குமார் மற்றும் நான்கு நபர்கள் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.
காணாமல் போன 2 இளம் பெண்கள்
தேனி, ஏப்.8- கம்பம், ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் 2 இளம் பெண் கள் காணாமல் போனதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் . கம்பம் மணி நகரத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் புவ னேஸ்வரி (வயது18). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரி திடீரென மாய மானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் மகள் காவியாஸ்ரீ (16). இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றார். அதனை அவரது பெற்றோர் விரும்பவில்லை. எனவே வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். இந்த நிலையில் வீட்டில் இருந்த காவியாஸ்ரீ திடீரென மாயமானார். இது குறித்து க.விலக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசியில் 2300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் இரண்டு பேர் கைது
சிவகாசி. ஏப்.8- சிவகாசி இரட்டைப் பாலம் அருகே ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை மடக்கிச் சோதனையிட்டனர். அதில், 46 மூட்டைகளில் 2300 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து. அதில் இருந்த வர்களிடம் நடத்திய விசாரணையில், ரேசன் அரிசியா னது, நெல்லை மாவட்டம். தாழையூத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் முத்து என்ற பேச்சிக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. மேலும்,வண்டியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (24), கோவில்பட்டியைச் சேர்ந்த சுமைப்பணியாளர் கொம்பையா(22) ஆகியோரை கைது செய்தனர். முத்து என்ற பேச்சியை தேடி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் 10 ஏக்கர் நிலம் போலி பத்திர பதிவு செய்து மோசடி சார் பதிவாளர், எழுத்தர் உட்பட 5 பேர் மீது வழக்கு
திருவில்லிபுத்தூர், ஏப்.8- இராஜபாளையத்தை சேர்ந்தவர் சாத் தையா(76). இவரது மனைவி வசந்தமாலா. அதிமுகவைச் சேர்ந்த சாத்தையா கடந்த 1991-1996 இல் ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன்கோவில் அருகே வெள்ளப்பொட்டல் கிராமத்தில் 10.23 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதன் பின் சாத்தையா தனது குடும்பத்துடன் சென் னையில் குடியேறி விட்டார். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த சிலர் சாத்தையா வுக்கு போன் செய்து உங்களது இடத்தில் சிலர் பணி செய்து வருவதாக கூறியுள்ளனர். இதையெடுத்து சாத்தையா வெள்ளப் பொட்டல் கிராமத்தில் வந்து பார்த்த போது, திருமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவ ரது பெயரில் நிலம் மாற்றப்பட்டுள்ளது தெரி யவந்தது. இதுகுறித்து பத்திர பதிவு அலுவல கத்தில் விசாரித்த போது, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜமுனியாண்டி (75), அவரது மனைவி முத்துலட்சுமி(72) ஆகியோர் குன்னூர் பத்திரபதிவு அலுவல கத்தில் தாங்கள் தான் சாத்தையா, வசந்த மாலா என்று போலி ஆவணங்களை தயார் செய்து 10.23 ஏக்கர் நிலத்தை தனது மகன் முருகன் என்பவருக்கு போலியாக பத்திரப் பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தையா அளித்த புகா ரில், முருகன், அவரது தந்தை ராஜமுனி யாண்டி, தாய் முத்துலட்சுமி மற்றும் போலி பத்திர பதிவிற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் சார்லஸ்பிரபு, பத்திர எழுத் தர் மாரியப்பன் ஆகிய 5 பேர் மீது 6 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து நத்தம் பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் கொடுமை தாங்காமல் மனைவியுடன் விஷம் குடித்த காவலாளி பலி
தேனி ,ஏப்.8- தேனி அருகே மதுராபுரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச் சந்திரன் (வயது 61). இவர் பழனி செட்டிபட்டியில் உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் காவலாளி யாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தன லட்சுமி (56). இவர்கள் இரு வரும் கடந்த 4 ஆம் தேதி வடபுதுப்பட்டியில் உள்ள தங்க ளுக்கு சொந்தமான காலி இடத்தில் விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்க ளது மகன் கஜேந்திரன் ராணு வத்தில் பணியாற்றி வந்ததாக வும், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் திரும்பி பணிக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி தங் களை கொடுமை செய்ததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரி வித்தனர். தீவிர சிகிச்சை பெற்றும் பயனின்றி ரவிச்சந்தி ரன் உயிரிழந்தார். தனலட்சுமி சிகிச்சை பெற்று குணமடைந் தார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் ஆய்வா ளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புகார் மனு மேளாவில் 300 மனுவுக்கு தீர்வு
தேனி, ஏப்.8- தேனி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ,துணைக் கண் காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட காவல் நிலை யங்களில் நடைபெற்ற புகார் மனு மேளாவில் 300 மனுக் களுக்கு தீர்வு காணப்பட்ட தாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகம், துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் மனு மேளா நடத்த தெற்கு மண் டல காவல்துறை தலை வர் அஸ்ரா கார்க் உத்தர விட்டார். அதன் அடிப்படை யில் தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் 300 மனுக் கள் மீது தீர்வு காணப்பட்டது. 15 பேர் கைது அது போல வெள்ளிக் கிழமை இரவு ரவுடிகள், கஞ்சா விற்பனையாளர், பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டவர்களை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது .மாவட்டத் தில் 139 குழுக்கள் அமைக் கப்பட்டு 57 இடங்களில் வாகனச் சோதனை ,67 விடுதி களில் சோதனை நடத்தப் பட்டது. அதில் 136 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டதில் 19 நபர்களுக்கு நன்ன டத்தை பிணையம் பெற நட வடிக்கை எடுக்கப்பட்டது. பிடிவாரண்ட் பிறப் பிக்கப்பட்டு நிலுவையிலி ருந்த 15 பேர் கைது செய் யப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் 2450 கிலோ கஞ்சா பறிமுதல் - 494 பேர் கைது
மதுரை, ஏப். 8- தென் மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் 2450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சா விற்ற 494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தென் மண்டல ஐஜி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் மண்டல காவல்துறை தலை வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டில் தொடக்கம் முதல் மார்ச் மாத இறுதி வரையுள்ள கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தென்மண்டலத்துக்குள்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 761 கஞ்சா குற்றவாளி கள் மீது நன்னடத்தைக்கான பிணையப் பத்திரம் பெறப் பட்டுள்ளது. மேலும் 52 கஞ்சா விற்பனை குற்றவாளி கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மதுரை மாவட்டத்தில் 31, விருதுநகர் மாவட்டத்தில் 26, திண் டுக்கல் மாவட்டத்தில் 30, தேனி மாவட்டத்தில் 41, இராம நாதபுரம் மாவட்டத்தில் 23, சிவகங்கை மாவட்டத்தில் 10, திருநெல்வேலி மாவட்டத்தில் 24, தென்காசி மாவட்டத் தில் 20, தூத்துக்குடி மாவட்டத்தில் 25 மற்றும் கன்னியா குமரி மாவட்டத்தில் 24 என 11 மாநகரங்களில் மொத்தம் 265 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சுமார் 2450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இதனோடு தொடர்புடைய 494 பேர் கைது செய்யப்பட்டனர். தென் மாவட்டங்கலல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கஞ்சா மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்பு ணர்வு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்ப னைக்கு எதிராக காவல்துறையினரின் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் 90 பவுன் நகை கொள்ளை: 2 பேர் கைது
சிவகாசி. ஏப்.8- சிவகாசி அருகே உள்ளது சித்துராஜபுரம். இங் குள்ள தேவி நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன், அச்சக உரிமையாளரான இவர் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்றி ருந்தார். இதை நோட்டமிட்ட நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 90 பவுன் தங்க நகை, வைர நெக்லஸ், 3 ஜோடி வைர கம்மல், வெள்ளிக்கொலுசு, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இந்தச் சம்பவம் தொடபாக சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் உத்தர வின்பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற வாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வந்தது, இந்தநிலையில் கொள்ளை சம்பவம் நடை பெற்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த வழியே வெளி மாநில வாலிபர்கள் அடிக்கடி நோட்டமிடுவதும் சம்ப வத்தன்று குல்லா அணிந்த இருவர் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. மேலும், நடத்திய விசா ரணையில், தெலுங்கானா மாநிலம் வாராங்கல் வட பள்ளி சர்ச் பகுதியை சேர்ந்த சிவா (24) ,சூரியா ( 23) ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது, இதையடுத்து. இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகளை மீட்டனர்.
மதுரையில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா முகக்கவசம் அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தல்
மதுரை, ஏப். 8- மதுரையில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் பணி புரியும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர் வீட்டுத் தனி மையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புடன் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சனிக்கிழமையன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 65 வயது முதியவர் தவிர்த்து இதர 4 பேரும் இளம்பெண்கள் ஆவர். இதையடுத்து 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகை யில், வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே வெளி மாநிலங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள், சுற்றுலா சென்று வருபவர்கள் ஆகியோர் மூலம் தமிழகத்திலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மதுரையிலும் கொரோனா தொற்று கடந்த மாதத்தை விட தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு பாதிப்பு மிகக்குறைவாகவே உள்ளது. எனவே அவர்கள் சில நாள்கள் வீட்டுத்தனிமையில் இருந்து உரிய மருந்துகள் மற்றும் ஓய்வு எடுத்துக்கொண்டால் சில நாட்களில் குண மாகி விடுகிறது. முதியவர்கள், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வர்கள், கர்ப்பிணிகள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதே போல் முகக்கவசம் அணிவது தற்போது குறைந்து வருகிறது. பொதுமக்கள் அனை வரும் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரி வித்தனர்.