districts

மாடக்குளம் கண்மாயின் கரையை உயர்த்துக! உபரிநீரை வீரமுடையான் கண்மாயில் தேக்கிடுக!

மதுரை, நவ. 19-   மதுரை நகரைச் சுற்றி யுள்ள பகுதிகளில் கடந்த சில  தினங்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு கண்மாய்களில் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அவற்றில்  மதுரை மாடக்குளம் கண்மாயும் ஒன்று. பொதுப்பணி துறையின் பராமரிப்பில் உள்ள இந்தக் கண்மாய் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 167 மில்லி யன் லிட்டர் கொள்ளளவுடன்  மூன்று மதகுகளைக் கொண்டுள் ளது.  தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இதனொரு பகுதியாக கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் அருகாமையில் உள்ள முத்துப்பட்டி கண்மாய்க்கு சென்றடையும் கால்வாய்களை தூர்வார வேண்டும். l பொதுப்பணித்துறையின் மதுரைக் கோட்ட  நீர்வள ஆதா ரத்துறை தலைமைக் கண்கா ணிப்புப் பொறியாளர் மாடக் குளம் கண்மாய் கரை பகுதி கள் மற்றும் முத்துப்பட்டி வீர முடையன் கண்மாய்க்கு  செல்லும் வரத்து கால்வாய்க ளை நேரில் ஆய்வு செய்து கண்மாயின் இருபுறம் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும். தேவையான தண்ணீ ரைச் சேமிப்பதற்கும் உபரி தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கு வசதியாக மாடக்குளம் கண்மாய்  தெற்கு மடையில் இருந்து வரும் கால்வாய், முத்துப்பட்டி வரும் வரத்துக் கால்வாய், மதுரை புறவழிச்சாலை சிருங்கேரி மடம் அருகில் உள்ள துரைச்சாமி நகர் கால்வாய்களை தூர்வாரி கண்மாயிலிருந்து வரும் உபரி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரைக்கல் வாய்க் காலை தூர்வாரி பாலத்தை உயர்த்தி கட்டவும்  நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  மதுரை  நகரைச் சுற்றியுள்ள கண்மாய்க ளை ஆய்வு செய்து தேவையான  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. l    இது தொடர்பான கோரிக்கை மனுவை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பி. சிவராமன் ஆகியோர் நீர்வளத்துறை தலைமை பொறியாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.