திண்டுக்கல், டிச.28- செந்தொண்டர் பேரணியுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக் கல் மாவட்ட 23வது மாநாடு டிசம்பர் 28 செவ்வாய்க்கிழமையன்று வேடசந்தூ ரில் துவங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சி ஆத்து மேட்டில் நடைபெற்றது. தோழர்கள் முத்துக்கருப்பன், முத்துராஜ் ஆகி யோர் நினைவாக கொண்டுவரப்பட்ட மாநாட்டு கொடி, கம்பம் மற்றும் தோழர் கள் சுப்ரமணி, தெண்டாயுதம், ரெங்க சாமி, வின்சென்ட், மரியதாஸ், ஜேம்ஸ், சிவராஜ், நாகம்மாள், சாந்தாம்மாள், ஆண்டாள் ஆகியோரின் நினைவு ஜோதி களை மூத்த தோழர்கள் ஆர்.மணி, என்.காந்தி, எம்.கருணாகரன், ரெங்க சாமி, கந்தசாமி, வ.கல்யாணசுந்தரம் ஆகியோர் வழங்க கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் கள் காமராஜ்,என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், பி.கே. கருப்புசாமி ஆகியோர் பெற்றுக்கொண் டனர். எம்.ஆர்.முத்துச்சாமி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டுக்கு கே.ஆர்.கணேசன், ஆர்.வனஜா, ஏ.அரபுமுகமது ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.செல்வராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத் பேசினார். மாநாட்டில் சம்பத் பேசுகையில், மோடி ஆட்சியில் பன்னாட்டு நிறுவ னங்கள், 140 பெருமுதலாளிகள் வளர்ந் துள்ளனர். இது தான் மோடி சொல்கிற வளர்ச்சி. இந்தியா விடுதலை அடைந்த காலம் முதல் சோசலிச நாடுகள் உதவி யுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வை பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்கள். இன்றைக்கு அவை தான் நாட்டின் வளர்ச்சி. அது மோடி யையும், முதலாளிகளையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றை தனியா ருக்கு தாரை வார்க்க முயல்கிறார்கள். இந்துக்களுக்கும் பாஜகவின் நட வடிக்கைகள் ஆபத்தானது. ஹிட்லர், முசோலினி பாதையில் நடைபோடும் மோடி அரசை, ஆர்.எஸ்.எஸ் கும்பலை வீழ்த்த வேண்டும். அதனை நாம் நிகழ்த்திக் காட்டுவோம் என்றார்.