ஆலுவா, அக்.16- அறிவியலுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கை களை சமூகத்தின் மீது திணிக்க ஆர்எஸ்எஸ் உள் ளிட்ட வகுப்புவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன. அத்தகையவர்கள் பெண் களை மூடநம்பிக்கை மற்றும் ஒழுக்கக்கேடுகளுக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கின் றனர் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி கூறினார். கேஎஸ்கேடியு மாநில மகளிர் மாநாட்டை ஆலுவா வில் துவக்கி வைத்து பி.கே. ஸ்ரீமதி மேலும் கூறியதாவது: மதவெறியின் பெயரால் பெண்களைச் சுரண்டுவதற் கும், சமூகத்தில் செல் வாக்கை நிலைநிறுத்த அவர் களைப் பயன்படுத்துவ தற்கும் வகுப்புவாத சக்தி கள் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டை ஆளு கிற கட்சி என்ற எண்ணத் திற்கு சமூகத்தை கொண்டு வர திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் சக்தியே தேசத்தின் சக்தி என்று நரேந்திர மோடி அறிவித்த சில மணி நேரங்களில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களை பாஜக அரசு விடுதலை செய்கிறது. ‘இந்தி, இந்து, இந்துஸ் தான்’ என்ற கொள்கை யுடன் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற கொள்கையை நோக்கி நாட்டை நகர்த்தி வருகிறது ஆர்எஸ்எஸ்.
அதேநேரத்தில், நாடு எதிர்நோக்கும் நெருக்கடி களைத் தீர்க்க அவர்கள் முயற்சிக்கவில்லை. நாட் டில் பட்டினியும் வேலை யின்மையும் மோசமாகி வரு கிறது. சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட வற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன. பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. கோவிட் காலத்தில் பணக் காரர்கள் மேலும் பணக்கா ரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆனார்கள். தேசத்தின் அனைத்து சொத்துக்களும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு எழுதி வைக்கப் பட்டுள்ளன. நாடு பெரும் அராஜகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மாற்றாக கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்பட்டு வருகிறது. அன் றாடத் தேவைகள் உட்பட விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. விவசா யத் தொழிலாளர்கள் மற்றும் பிறருக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.1600 வழங்கப்படு கிறது. நாட்டில் பாலின சமத்துவமின்மை ஒழிக்கப் பட வேண்டும். பெண்க ளுக்கு சம அந்தஸ்து வேண் டும். அதற்கான போராட் டங்களுக்கு இத்தகைய மாநாடுகள் ஆற்றலாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.