சிவகங்கை, ஜூன் 19- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல களை கண்டித்தும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறு திகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக் கம் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட் டத்தில் 146 மையங்களில் பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்தின் நிறைவு நாளான தியாகி ராமநாதனின் நினைவு நாளன்று (ஜூன் 20) நாச்சியாபுரத்தில் காலை 9 மணிக்கு செங்கொடி ஏற்றப்படுகிறது. கண்டரமாணிக்கத்தில் மாலை 6 மணிக்கு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தியாகி ராமநாதன் இப்பகுதி விவ சாயிகளுக்காக பல கட்ட போராட்டங் களை நடத்தியவர். தஞ்சை மண்ணில் விவ சாயிகளைத் திரட்டி புரட்சி நடத்தி யவர். சாணி பால் குடிக்க வைத்து விவ சாயிகளை அடித்த கொடுமையை எதிர்த்து போராடியவர். தோழர் சீனி வாசராவ் அவர்களோடு இணைந்து சிவ கங்கை மாவட்டத்தில் நாச்சியாபுரம், கம்பனூர் ஆகிய பகுதிகளில் விவசாயி கள் சங்கங்களை உருவாக்கியவர் தோழர் ராமநாதன். அச்சமயத்தில் பொய் வழக்கு போட்டு அவர் சிறைக்கு அனுப்பப் பட்டார். சிறை யில் கட்சித் தோழர்கள் நான்கு பேரை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்த போரா ட்டத்தில் போது சிறை காவலர்களால் அடித்து கொல்லப்பட்டவர் தியாகி இராம நாதன். அவருடைய நினைவாக ஜூன் 20 அன்று நினைவு தின பொதுக்கூட்டமும், பிரச்சார நிறைவு பொதுக்கூட்டமும் கண்ட ரமாணிக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்று கிறார். இந்த இயக்கங்களில் அனைத்து தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்டச் செயலாளர் மோகன் தெரி வித்துள்ளார்.