districts

img

தோழர் காவியன் நினைவு கூடல்

நாகப்பட்டினம், ஜன.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒரு வரும், தீக்கதிர் நாளிதழின் மாவட்ட நிருபராகவும் பணியாற் றிய காவியன் ஓராண்டு நினைவு கூடல் நிகழ்வு நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங் கில் நடைபெற்றது. இதில் தமுஎகச மாநில முன் னாள் துணைச் செயலாளரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னருமான வீ.பி.நாகைமாலி கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார். தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் ஆவராணி. ஆனந்தன், மாவட்டச் செயலாளர்  ஆதி, உதயக்குமார், சமூக செயல் பாட்டாளர் கவின்மலர், எழுத்தா ளர் கவின் மற்றும் மாவட்டக் குழு தோழர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.