நத்தம்,டிச.20- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி ஒன்றியம் தெற்கு களத்தைசேர்ந்த மின் ஊழி யர் மத்தியஅமைப்பின் ஓய்வு பெற் றோர் சங்க முன்னாள் மாவட்ட தலை வர் தோழர் பி. அர்ச்சுணன் டிசம்பர் 19 திங்களன்று இரவு காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே .பாலபாரதி ,மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என். பெருமாள், வனஜா. எஸ். ஆர். சௌந்தர ராஜன் ,ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், நிலக் கோட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.