விதிகளை மீறும் மினி பேருந்துகள் நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்
சிவகாசி, மார்ச் 8- சிவகாசியில் உரிய வழித்தடங்களில் செல்லாமல் வெவ்வேறு பகுதிகளில் மினிப் பேருந்தகள் இயக்கப் பட்டு வருவதாக சிஐடியு -விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில், சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராள மான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களை நம்பியே நிலையத்தின் வெளியே 80-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உரிய அனுமதியின்றி விதிகளை மீறி மினிப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் காந்தி ரோடு பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதோடு, ஆட்டோ தொழிலும் பாதிக்கப்படுகிறது. மினி பேருந்துகளை அனுமதி பெற்ற வழித்தடங்களில் இயக்காமல் லாப நோக்கத்தில் தங்கள் விருப்பம் போல் இயக்குகின்றனர். இதனால் அரசு பேருந்துகளுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மனுவை மாவட்ட தலைவர் மகேந்திரகுமார், சிபிஎம் நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் உட்பட பலர் வழங்கினர்.
செம்பட்டி அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம்- 2 ஆடுகள் பலி
சின்னாளப்பட்டி, மார்ச் 8- செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டியில் வெறிநாய் கடித்து 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ். பாறைப்பட்டி கிராமத்தில் புதன்கிழமையன்று வெறிநாய் திடீரென குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கு ராமாயி (60), கருப்பாயி (53), இந்திரா (60), சிறுமி ஹன்சிகாஸ்ரீ (7), பிரியா (28), இந்திராணி (48), ராஜாத்தி (60), சஞ்சய், ராஜேஷ் உட்பட 15-க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதில் காய மடைந்த அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் படுகாயமடைந்த ராமாயி என்பவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். மேலும், இந்த வெறி நாய் கடித்ததில் 2 ஆடு கள் பலியாகின. மாடு ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. கிராமத்தில் உள்ள கோழிகள், குட்டி நாய்கள் என கண்ணில்பட்ட அனைத்தையும் கடித்துக்குதறியது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெறி நாயை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
செம்பட்டி அருகே பண்ணையில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி
சின்னாளப்பட்டி, மார்ச் 8- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்துள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சோலைராஜன் (61). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செம்பட்டி-பழனி சாலையில் உள்ள ஆர்விஎஸ்-தனியார் தோட்ட பண்ணையில் டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமையன்று காலை, பண்ணை யில் டிராக்டரில் சென்ற சோலைராஜன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்தக் காயம டைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். செம்பட்டி காவல்துறையினர் சோலைராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே சடலம் மீட்பு
சின்னாளப்பட்டி, மார்ச் 8- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த அம்பாத்துரை இரயில் நிலையத்திலிருந்து கொடைரோடு மார்க்கமாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 60-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான ரயில்வே காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேராசிரியர் அருணன் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை மதுரையில் நடைபெறுகிறது
மதுரை, மார்ச் 8- பேராசிரியர் அருணன் எழுதியுள்ள “ஞானக் கோலங்கள் 200” கவிதை நூல் வெளியீட்டுவிழா 10-3-2023 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு மதுரை கே.கே. நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடை பெறவுள்ளது. விழாவிற்கு தமுஎகச மாநில துணைச் செயலாளர் ஸ்ரீரசா தலைமையேற்க, மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் மீ.லெனின் வரவேற்புரையாற்றுகிறார். செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொள்கிறார்.தமுஎகச மதிப்புறு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.நூலாசிரியர் பேராசி ரியர் அருணன் ஏற்புரை நிகழ்த்துகிறார். தமுஎகச மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா பழனி வேல் நன்றி கூறுகிறார். தமுஎகச மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக் கள் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.ரூ.300 விலை யுள்ள நூல், விழா அரங்கில் ரூ.200-க்கு கிடைக்கும் என வசந்தம் வெளியீட்டகம் தெரிவித்துள்ளது.
இராஜபாளையத்தில் விபத்து: ஒருவர் பலி
இராஜபாளையம்,மார்ச் 8- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. எம்பிகே. புதுப் பட்டி விலக்கை தாண்டி சென்ற போது, ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சங்கரன் கோயில் அருகே மணலூரை சேர்ந்த புலியூரான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த இவரது மனைவி தீபிகா மற்றும் பேருந்து ஓட்டுனர் முருகன் ஆகியோர் படு காயமடைந்தனர்.இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்து வமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட னர். முதலுதவிக்கு பிறகு தீபிகா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வன்னியம்பட்டி காவல் துறையினர் பேருந்துக்குள் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர்கள் கைது
தேனி, மார்ச் 8- தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் பழனிசெட்டி பட்டி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, கோடாங்கிபட்டி-பூதிப்புரம் சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்த சரஸ்வதி(55), அஜீத்(23), விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர் களிடமிருந்து 2 கிலோ, 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய கோடாங்கிபட்டி யைச் சேர்ந்த சந்திரா என்பவரை தேடி வருகின்றனர்.