districts

img

நகைக்கடன் தள்ளுபடி கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், பிப்.25- இராமநாதபுரம் மாவட் டம் சிக்கல் பகுதியில் 5 பவ னுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு முழு மையாக கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.பச்சம்மாள் தலைமை வகித்தார். இதில்,  சிஐடியு மாவட்ட செயலா ளர் எம்.சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கருணா மூர்த்தி, ஆட்டோ சங்க தலை வர்கள் எம்.கருப்புசாமி, டி.ஜெயக்குமார், டாஸ்மாக் சங்க தலைவர் டி.நம்புரா ஜன், மீனவர் சங்க தலைவர் சக்திகுமார், வாலிபர் சங்க பொருளாளர் அம்ஜத்கான், விவசாய சங்க தலைவர் பெரியசாமி, பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் 200 பேர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 5 பவனுக்கு குறைவாக நகை அடகு வைத்தவர்க ளுக்கு திருப்பாவிட்டால் ஏலம் விடப்படும் என்ற அறி விப்பு நோட்டீஸ் நிறுத்தப் பட வேண்டும், பொதுமக்க ளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.  மேலும் இதில், 150க்கும் மேற்பட்ட நகைக் கடன் அட்டைகளின் நகல்கள், கிளை மேலாளரிடம் காவல் துறையினர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.