districts

img

திருவில்லிபுத்தூரில் குழந்தைகள் அறிவியல் மாநாடு

திருவில்லிபுத்தூர்,அக்.31- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் திரு வில்லிபுத்தூர் சத்யா (சிபிஎஸ்இ) பள்ளியில் மாவட்ட அளவிலான தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு திங்கட்கிழமையன்று நடைபெற்றது,   மாநாட்டில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப் பிக்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.  நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வறிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. பள்ளி  தாளாளர் குமரேசன் தலைமையில் பள்ளி முதல்வர் செந்தில்குமார், பள்ளி ஆலோசகர் பாரதி , பள்ளி நிர்வாக அலுவலர்  அமுதா ஆகியோர் முன்னிலையில் மாநாடு  நடைபெற்றது வைமா வித்யாலயா பள்ளி தாளாளர் திருப்பதி செல்வம் மற்றும் மகாத்மா வித்யாலயா பள்ளி  தாளாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.