தேனி ,மே.29- கேங்மேன் தொழிலாளர்களை பணி வரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) தேனி மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் தேனி மாவட்ட 12 ஆவது திட்ட பேரவை ஞாயிறன்று பெரியகுளத்தில் தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவரங்கில் நடைபெற்றது . மாநில துணைத் தலை வரும் ,மாவட்ட தலைவருமான எஸ்.ராமச் சந்திரன் தலைமை வகித்தார் .பெரியகுளம் கோட்ட செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார் .முன்னாள் திட்ட பொருளாளர் எஸ்.பரமசிவம் சங்க கொடி யினை ஏற்றி வைத்தார்.அஞ்சலி தீர்மா னத்தை எம்.வளர்மதி வாசித்தார் .மின் துறை பொறியாளர் அமைப்பின் மாநில தலை வர் ஆர்.குருவேல் துவக்கி வைத்து பேசி னார் .திட்ட செயலாளர் ஏ.தேவராஜ் வேலை அறிக்கையையும் ,ஆர்.பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித் தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச் சந்திரன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜி.சண்முகம் ஆகி யோர் வாழ்த்தி பேசினர் .புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து வைத்து மாநில தலைவர் டி.ஜெய்சங்கர் நிறைவுரையாற்றி னார். மகாலிங்கம் நன்றி கூறினார். பேரவையில் தலைவராக எஸ். இராமச்சந்திரன் ,செயலாளராக ஏ. தேவ ராஜ் பொருளாளராக இரா. பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். 13 துணை தலைவர்கள் ,13 இணை செயலா ளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். காலிப்பணியிடங்களை நிரப்பி ,பணியா ளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியமே தினக்கூலி ரூ.380 வழங்கி, அடையாளம் கண்டு கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் 1.12.2019 ஆண்டு முதல் ஊழியர்கள்,பொறியாளர்கள் அனைவ ருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.