மதுரை, ஜூலை 3- மதுரை திருமோகூரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கொடூரத் தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளார். மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அருகே உள்ளது. திருமோகூர். இங்கு சமீபத்தில் நடைபெற்ற கோவில் திரு விழாவின் போது பட்டியலின சமூக மக்கள் மீது வேறொரு தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சூறையாடப்பட்டன. இது சம்பந்தமாக யா.ஒத்தக்கடை காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் காலனிப் பகுதி யைச் சார்ந்த பிரபு என்பவரைத் திங்க ளன்று ஒரு கும்பல் தாக்கி சித்திர வதை செய்துள்ளது. கத்தியால் உடல் மற்றும் கை ஆகிய பகுதிகளில் கிழித் துள்ளது. இதில் கடுமையாகப் பாதிக் கப்பட்ட பிரபுவை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபுவை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பட்டியலின மக் கள் திருமோகூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நமது நிருபர்