திருநெல்வேலி ,டிச. 20- உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்படு வதாக எழுந்த புகாரையடுத்து பஞ்சா யத்து தலைவர் வின்சி மணி அரசு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவு வாயிலில் மறியல் போ ராட்டம் நடந்தது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வரு கிறது.தற்போது அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது, இந்த நிலையில் 3, 4-வது அணு உலையில் தற்காலிக என்ஜினீ யர் பதவிக்கு சமீபத்தில் எழுத்து தேர்வு நடந்தது. இதில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பி.இ. பட்டதாரிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். சமீபத்தில் தேர்வு முடிவு வெளி யிடப்பட்டது.இதில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவர்க ளுக்கு ஒட்டுமொத்தமாக வேலை வழங்கப்படவில்லை. வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக் காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இது கூடங்குளம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி அரசியல் பிரமு கர்களிட மும் புகார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்சி மணிஅரசு தலைமையில் கூடங் குளம் அணுமின் நிலைய நுழைவு வாயி லில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜான்சி ரூபா மற்றும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.போராட்டத்திற்கு கூடங்குளம் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து பெருமளவில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து பஞ்சாயத்து தலைவர் வின்சி மணிஅரசு கூறிய தாவது:-கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பாக கூடங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருவதாக ஆசைவார்த்தை கூறி எங்கள் நிலத்தை அபகரித்தார்கள். தற்போது உள்ளூர் மக்களை புறம்தள்ளி விட்டு கேரளா மற்றும் வெளியூர் இளைஞர்க ளுக்கு அதிகமாக வேலை கொடுக்கி றார்கள். அணு உலை சார்பாக சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கு கூட ஒரு சிறிய பூங்கா அமைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத் தும் அணு உலை பூங்கா எதற்கு? அணு உலைக்காக எங்கள் வாழ்வாதாரத்தை நாங்கள் தாரை வார்த்துள்ளோம். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்.எனவே இந்த பகுதி யில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அணு உலைகளை மூடிவிட்டு வெளி யேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.